search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருதமலை முருகன் கோயில்"

    • நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    வடவள்ளி,

    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசு வாமிகோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (ஞாயிற் றுக்கிழமை) வைகாசி விசாக நிகழ்ச்சி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோ பூஜை நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மூலவருக்கு பன்னீர், ஜவ்வாது, சந்தனம், உட்பட 16 வகையான வாசனை திர வியங்களால் அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் மற்றும் வைர நகைகள் பொறிக்கப்பட்ட தங்க கவச உடையில் சுவாமி காட்சியளிக்கிறார்.

    பின்னர் பக்தர்கள் பால்குடம், காவடிகளை பாதயாத் திரையாக எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வரும் நிகழ்ச்சியும், பிற்பகல் 12 மணிக்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் குடங்கள் மூலம் சுப்பிரமணிய சுவாமிக்கும் வள்ளி தெய்வானைக்கும் மூலவருக்கும் பால் அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு மீண்டும் மூலவருக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதியுலா வரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    இதுபோல் மருதமலை அடிவாரத்தில் உள்ள வள்ளியம் மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதைதொ டர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    அதுபோன்று மலையடிவாரத்தில் வேல்கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இந்த கோவிலில் வேலே பிர தானமாக வழிபாடு செய்யப்படுகிறது. இங்கும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெ றுகிறது.

    ×